குமரிக்குன்றம்

குமரிக்குன்றம் தமிழன் சங்கரின் original Tamil epic fantasy / தமிழ் காவிய மாயக் கதைகள் தொடராகும். அரவான் கிராமத்தில் தொடங்கும் ஈமரனின் பயணம், கருங்கல் தூண், நிழலார், வேள்நாட்டின் ஆதிக்குடிகள், மறைக்கப்பட்ட நினைவுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு விரிகிறது.

புதிய வாசகர்கள் தமிழ் காவிய மாயக் கதைகள் பக்கத்தில் இந்த உலகத்தின் வாசிப்பு வழியை அறிந்து கொண்டு, கீழே உள்ள அத்தியாய வரிசையில் தொடங்கலாம்.

கதை உலகை விரிவாகப் புரிந்துகொள்ள பாத்திரங்கள், உலகம், சொற்களஞ்சியம் பக்கங்களையும் பார்க்கலாம்.

வேள்நாட்டின் எல்லைகளில் மறைந்திருக்கும் குமரிக்குன்றம், நூற்றாண்டுகளாக அமைதியில் இருந்தது. எந்த மனிதரும் தொடத் தயங்கும் பண்டைய கருங்கல் — அந்த அமைதியை ஒருநாள் உடைத்து, ஈமரன் என்ற இளைஞனின் பெயரை அழைக்கிறது.
கல்லின் ஒளியில் மூன்று சின்னங்கள் தோன்றுகின்றன — கிரீடம், பாம்பு, பிளந்த நட்சத்திரம்.

அவைகளுடன் பிறக்கிறது ஒரு எச்சரிக்கை:
“நிழலார் எழுகின்றனர். காவலர்களைத் தேடு. மறைந்தோரை எழுப்பு.”

ஆனால் ஈமரன் ஒரு சாதாரண கிராமப்பையன் மட்டுமே.
அவன் ஆயுதம் எதுவும் அறியாதவன்.
வெளிநாட்டுகளைப் பார்த்ததில்லை.
ஆனால் உலகம் அவனை விட்டுவிடவில்லை.

அவனைத் துரத்தத் தொடங்குகிறது — கனவுகளிலிருந்து எழும் நிழல்களின் குரல்.
வடக்கே சிவந்த வானத்தின் துடிப்பு.
உள்ளங்கையில் எரியும் ஒரு மறைந்த சக்தி.

குமரிக்குன்றம் ஒரு கல்லல்ல…
அது ஒரு கதவாக இருக்கலாம்.
ஒரு தீர்ப்பாக இருக்கலாம்.
அல்லது ஒரு அழைப்பாக இருக்கலாம்.

வேள்நாட்டின் வரலாறு மாறத் தொடங்குகிறது.
அந்த மாற்றத்தின் முதலடி —
ஈமரனின் இதயத் துடிப்பே.

குமரிக்குன்றம் அத்தியாயங்கள்

வேள்நாட்டின் ஆதிக்குடிகளின் நினைவுகளைத் திறக்கும் குமரிக்குன்றம் தொடரின் வெளியிடப்பட்ட அத்தியாயங்கள். இது தமிழன் சங்கரின் original Tamil epic fantasy / தமிழ் காவிய மாயக் கதைகள் வாசிப்பு பாதையின் முக்கிய தொடர்.

Start Reading / Reading OrderNew readers can follow the complete order before choosing a chapter.

  1. அத்தியாயம் 1: குமரிக்குன்றத்தின் மௌனம்

    வேள்நாடு எவ்வளவு தொன்மையானது என்று அதன் பாறைகளுக்கே நினைவிருக்காது; பருவமழைகளின் ஆவேசமும் ஆதிக்காற்றின் இடைவிடாத இசையும் அந்த நிலத்தின் வடிவத்தை எண்ணற்ற… Continue R…

  2. அத்தியாயம் 2: அணையாத வெப்பம்

    குமரிக்குன்றத்திலிருந்து இறங்கும் போது ஈமரனின் நடையில் வெளியில் தெரியும் மாற்றம் எதுவும் இல்லை; ஆனால் அவன் உள்ளே ஏதோ ஒன்று தன் இடத்தை மாற்றிக்… Continue Reading →

  3. அத்தியாயம் 3: அதிகம் அறிந்துவரும் அந்நியன்

    அடுத்த நாள் காலை, கனவு கலைந்திருந்தாலும் அதன் நினைவு இன்னும் கண்களில் ஒட்டியவாறே ஈமரன் விழித்தான். மண்ணை பிளந்து எழும் நெருப்பு கோடுகள், கருங்கல் தூணின்… Continue R…

  4. அத்தியாயம் 4: செந்நிற மேகங்களின் சாயல்

    அந்த நாள் உடைந்த சக்கரம் கொண்ட வண்டி நகர்வது போல மெதுவாக நகர்ந்தது. ஆதிரனிடம் பேசிய பின்பு, நேரம் தன் வழக்கமான ஓட்டத்தை இழந்தது போல ஈமரனுக்குள்… Continue Reading →

  5. அத்தியாயம் 5: சொல்லப்பட்டதும் சொல்லாததும்

    அது ஒரு நீண்ட இரவாக இருந்தது. காலை வெகு தாமதமாகவே புலர்ந்தது. பரிதி கூட யாரோ சமாதானப்படுத்தித் தான் கிழக்கில் எழுந்தது போல இருந்தது. அரவான் கிராமத்தின்… Continue Re…

  6. அத்தியாயம் 6: தாமதமான எச்சரிக்கை

    கூட்டம் கலைந்த நேரம், பரிதியின் ஒளி மெதுவாகக் மங்கத் தொடங்கி அரவான் கிராமத்தின் மேலே மெல்லிய போர்வை போலப் படிந்திருந்தது. பரிதியின் கிரணங்கள் வலு இழந்து… Continue R…

  7. அத்தியாயம் 7: திரும்ப முடியாத பாதை

    ஈமரன், விடை சொல்லாமல் அரவானை விட்டு வெளியேறினான். மூடிய கதவுகளும் பழக்கப்பட்ட சுவர்களும் தரும் பாதுகாப்புக்குள் அந்தக் கிராமம் அமைதியாக உறங்கிக்… Continue Reading →

  8. அத்தியாயம் 8: குமரிக்குன்றம் நினைவுகூருவது

    காலை விடிய வெகு நேரம் எடுத்தது, மெதுவாக—மிக மெதுவாக—மலைச்சரிவுகளில் பரவியிருந்த கற்களுக்கும் இலைகளுக்கும் இடையிலான இடைவெளிகளில் பரிதியின் கதிர்கள்… Continue Reading…

  9. அத்தியாயம் 9: கல்தூண் நினைவுகூர்ந்த பெயர்

    ஈமரன் பள்ளத்திலிருந்து உடனே நகரவில்லை. மூன்று உருவங்களும் வழி விட்டு விலகிய பிறகும், அந்த இடத்தில் இருந்த அமைதி உடனே கலைந்து போகவில்லை. மாலை வெளிச்சம்… Continue Rea…

  10. அத்தியாயம் 10: குமரிக்குன்றம் நிச்சயம் கேட்கும்

    குமரிக்குன்றம் அத்தியாயம் 10-ல், குமரிக்குன்றம் நிச்சயம் கேட்கும் என்ற புதிய திருப்பத்துடன் தமிழ் காவிய தொடர்கதை தொடர்கிறது. Continue Reading →

தமிழ் காவிய மாயக் கதைகள் பக்கத்தில் குமரிக்குன்றம் உலகம், முக்கிய பாத்திரங்கள், வாசிப்பு வழி ஆகியவற்றை விரிவாகப் பார்க்கலாம்.

ஆசிரியர்:
பெயல் நீர் சாரல் மற்றும் சிலிர்ப்பு சிதறல்கள் ஆகிய நூல்களின் ஆசிரியர் தமிழன் சங்கர். கவிதை, குறுங்கதை, நீண்ட உரைநடை ஆகிய வடிவங்களில் மனித மனத்தின் நுண்மையான உணர்வுகளையும், வாழ்க்கையின் மறைந்த அடுக்குகளையும் பேசும் எழுத்தாளர். தொன்மையான மாயம், விதி, நினைவு மற்றும் அடையாளம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட காவியக் கற்பனைத் தொடரான குமரிக்குன்றம் இவரின் சமீபத்திய படைப்பு.