0

அகந்தையின் உருவம் | A Question of Ego – தமிழ் கவிதை

Ego kavithai in Tamil – ஈகோ, பணிவு, உறவு, மனித மனம் பற்றிய சிந்தனை தரும் தமிழன்சங்கர் தமிழ் கவிதை.

உயரத்தை பார்த்து
பறவைகள் பயப்படுவதில்லை.

விஞ்சிய வண்ணங்களால்
அவை அகந்தை கொள்ளுவதில்லை.

மனிதா!
உனக்கு ஏன் அத்தனை அகந்தை?

-தமிழன்சங்கர்